பிள்ளையார் துதி

வெள்ளிக்கிழமை
வெள்ளிரத ஊர்வலமாம்
சொல்லிக் கேட்டால்
அள்ளி வரம் கொடுக்கும்
வினாயகராம்....!!!

விட்டில் பூச்சியும்
எட்டி நின்று ரசிக்கும்
வண்ண ஒளி மின்ன
ஊர்வலம் வரும்
ஆனந்த வினாயகராம்..!!

ஆங்காங்கே விளக்கு
வீதியில் எரிய பக்கத்தில்
பல பொருட்கள் படையலாகக்
காத்திருக்க பக்தர் கூட்டம்
வழி பார்த்திருக்க பவனி
வருகின்றார் பால
கணபதியார்......!!!!

முக் கனியில் முதல்
கனியான மாங் கனியை
தன் அறிவால் வசம் எடுத்த
தனயன் அவன்...!!!

செய்யும் காரியம்
சிறக்கவே தன்னை
முன் நிறுத்தி நினைக்க
வைத்த ஆனை முகத்தான்...!!

சிவனையே ஆட்டிப்
படைத்த சனீஸ்வரனையே
ஒரு சொல்லால் ஏமாற்றிய
ஐங்கரத்தான்...!!!

உள்ளம் உருகி வணங்கிய
கன்னியை முதிர்
கன்னியாக்கி தன்
தும்பிக்கை கொண்டு
தூக்கி எடுத்த நம்பிக்கையான்...!!!

நம்பிக்கையோடு
வணங்கி வ
ர தும்பிக்கையான்
துணை நிற்ப்பான்...!!

பட்டினியாக கிடந்து
வணங்காதே
பாசாங்கு காட்டி
வணங்காதே
பக்தியோடு வணங்கு
முக்தி பெறுவாய்..!

இன்று பிள்ளையார் திருநாள்

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (29-Aug-14, 6:32 am)
Tanglish : pillaiyaar thuthi
பார்வை : 508

மேலே