பதிவுகள்
தேயும் பதிவு நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வானத்தின் வண்ணப் பதிவு !
உலகில் உன் வாழ்வு
நீ வாழ்ந்த பதிவு
சிரித்தாலும் அழுதாலும்
உன் கதை உன் வரலாறு !
துன்பமோ இன்பமோ
மீளும் பதிவு
நெஞ்சினில் உன் நினைவு !
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
மீளாத பதிவு உலகில் ஒன்று
வாழ்வில் அதன் பேர் சாவு !
~~~கல்பனா பாரதி~~~