மறையட்டும் மனிதகாப்பிடம்

வாயூறு கொண்டே ஓரினம்,
மனித வர்ணம் கலைத்திட்டே,
குறிபில்லா காவு தனை,
அலறிக் கூடைதனில் அரங்கேற்றி,
தன் வேட்கை தீர்த்ததை,
கண்டும் கலங்கிடா மனிதகாப்பிடம்!

ஊண் பசியறியா உத்தமர்(?),
தீரா பசியாம் காமம்தனை,
கரைத்தொட-கயவர் சிலர் ,
கடைதனிலே விற்றிட்ட கலைமகளின்,
கண்ணீர்சுரப்பிகள் தீர்த்த கண்ணீரை,
கண்டும் கலங்கிடா மனிதகாப்பிடம்!

இன்றே புதையுண்டு அழியட்டும்!
மனிதம்,
பாதைப்புள்ளி எல்லாம் புதைக்குழியாய் மாறியே!
ஓசையின்றி கடையொரு ஒப்பாரி பாடியே!

முடியட்டும் முனைப்பில்லா இவ்வுலகம்!
பெருமுர்ச்சை அடைந்தே,
மனித உறக்கதினுள்!

விடியல்-விடை சொல்லட்டும்,
பெண்ணியம் புரட்சியினால்!

எழுதியவர் : பாரி (11-Sep-14, 1:13 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 142

மேலே