காட்சிகள் கற்றுத் தரும் கவிதைகள்
விழிகள் தூரிகையானால் - பார்க்கும்
காட்சிகள் யாவும் ஓவியம் - பேசும்
மொழிகள் தமிழ் என்றானால் - கேட்கும்
ஒலிகள் யாவும் கீதமே....!!
இனிமை என்பதை யாரறிவார் ?
இதயத்தில் தெய்வீகம் நிறைந்தவர் தானரிவார்....!
இன்தமிழ் பேசப் பழகிடுவோம் - வாழ்வில்
இன்னல்கள் இல்லை மகிழ்ந்திடுவோம்....!!