இறைவனைக் காணலாம் வாருங்கள்

தவத்தின் இலக்கணம்
தெரியாது - எனினும்
தனிமையில் இருந்து பார்த்தேன்.....!!

இயற்கையின் ஒலிகளில்
இறைநாமம் கேட்க முடிந்தது....!!

மலர்களின் மணங்களில் இருந்து
மாதவனை நினைத்தபடி ஒரு வித சுவாச கீர்த்தனை...!!

நதியின் தொடர் ஓட்டச் சத்தம் கூட
நமோ நாராயணா என்றே மகிழ்ச்சியுடன்..........

ஆம்

தவத்தின் இலக்கணம்
தெரியாது - எனினும்
தனிமையில் இருந்து பார்த்தேன்.....!!

இனிமையை நினைத்ததால்
இறைவனைக் காண முடிந்தது.....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (18-Sep-14, 6:39 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே