என் விநாயகா

விநாயகா உன்னை தேடி நாடி வந்தேன்..
உந்தன் திருவடியை காண..!

கிரீடமாக வந்தேன் ..
உந்தன் தலையில் பொருந்த..!

மாலையாக வந்தேன் ..
உந்தன் கழுத்தை தவழ..!

ஆபாரன்களாக வந்தேன் ..
உந்தன் அழகை பெருக்க...!

சுலமாக வந்தேன்...
உந்தன் நெற்றி திலகமாக ..!

பரசு வேலாக வந்தேன்..
உந்தன் வீர முத்திரையாக..!

குருக்களாக வந்தேன்..
உந்தன் புகழை அர்ச்சிக்க..!

முக்குழியமாக வந்தேன் ...
உந்தன் நாவில் கரைய ..!

எலியாக வந்தேன் ..
உந்தன் காலை சுற்றி வர ..!

பக்தர்களாக வந்தேன் ..
உந்தன் அருளை பெற ..!

அரக்கனாக வந்தேன் ..
உந்தன் கோவம் பார்க்க ..!

அகத்தியனாக வந்தேன் ..
உந்தன் கோவம் தனிக்க..!

விநாயகா.....

இத்தனையும் நானாகி வருவதற்கு...
உன் அருளே ..!! என் சிறந்த மெய் பொருளே....!!!
- செ.லட்சுமி காந்தன்

எழுதியவர் : செ.லட்சுமி காந்தன் (22-Sep-14, 11:09 am)
Tanglish : en vinayagaa
பார்வை : 180

மேலே