அன்புள்ள காற்றுக்கு

உருவமும், நிறமும் தெரியாமல் வீசும் உன்னை,
சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.....,
உன்மீது கொண்ட அன்பினால் அல்ல...;
எங்கள் உயிர் மீது கொண்ட ஆசையால்.....;
உன்னால் தான் பூக்களின் வாசனை
எவ்வளவு இனிமையானது என்று உணர்ந்தோம்...;
உன்னால் தான் அழுகிய பொருட்களின் வாசனை
எவ்வளவு கொடுமையானது என்றும் உணர்ந்தோம்.....;
சிலசமயம் தென்றலாக உருவெடுத்து -எங்கள்
மனத்தைக் குளிரவும் வைக்கிறாய்..;
சிலசமயம் புயலாக உருவெடுத்து எங்கள்
மனதைப் பதறவும் வைக்கிறாய்........;
பூந்சோலைகளுக்குள் வீசிப் பூக்களை
சிரிக்கவும் வைக்கிறாய்.., சிதைவுரவும் வைக்கிறாய்....
கட்டளை இடுவோருக்கு நீ கட்டுப் படுவதும் இல்லை.;
வேண்டுவோருக்கு இரக்கம் காட்டுவதும் இல்லை.......;
உன்னைப்போல் சுதந்திரமாக வாழ ஆசைதான்...;-ஆனால்
மனிதராகப் பிறந்து பாவம் செய்வதால் என்னவோ...
உன்னைச் சுதந்திரமாக சுவாசிக்க கூட
இயலவில்லை சிலநேரம்....-இப்படிப் பட்ட
உன்னை கண்களால் காணமுடியவில்லை என்றாலும்...
நீ தீண்டும் தருணம் உணர்கிறோம்,-எங்கள்
உள்ளதாலும்,உணர்வுகளாலும்..........;

எழுதியவர் : இலக்கியா.மு (27-Sep-14, 12:57 pm)
Tanglish : anbulla kaatrukku
பார்வை : 170

மேலே