ஜெயில்லலிதா

ஆளல் என்ற சொல் அரசியலில்
ஊழல் என்று புரியப்பட்டுள்ளது
ஆட்சி என்ற சொல்லையாவது
நீட்சி என்று புரியாதீர்கள்

மன்றத்தில் குமரி திண்டாடும்போது
குன்றத்தில் குமரன் கொண்டாடுகிறான்
தமிழினத்தைப் பார்ப்பணம் துண்டாடும்போது
யாரிடம் போய் மன்றாடுவான்

திறக்காத வரைக்கும் டீக்கடைதான்
திறந்தால்தான் அது சாக்கடை
பெண் சாக்கடை அடுப்பங்கறைக் கழிவுதான்
ஆண் குடித்த மது வாந்தி இன்னும் வரவில்லை

வேறுபாடுகளைக் களையும் நல்லொழுக்கம் அரசியல்
ஆண் பெண் வேறுபாடு இல்லை
சிறியோர் பெரியோர் வேறுபாடு இல்லை
பதாதி அனுபவசாலி வேறுபாடு இல்லை
நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடு கூட இல்லை
ஒரேமாதிரி அனைவரும் ஊழல் செய்கிறார்கள்.

ஒரேயொரு வேறுபாடு
தப்பிப்பவன் நல்லவன்
மாட்டுபவன் கெட்டவன்
நிதிக்கு கருணை காட்டுபவன்
பதுக்கி வைக்கிறான்
நிதிக்கு அரணைக் கட்டாதவள்
நீதிக்கு முன் நிற்கிறாள்

எழுதியவர் : மது மதி (28-Sep-14, 8:56 pm)
பார்வை : 147

மேலே