முகமில்லா காற்று
அன்று -
மூங்கிலுக்குள் நுழையும்
முகமில்லா காற்று - போல்
என் வாழ்க்கை புத்தகத்தின்
எல்லா பாக்கங்களையும்
வருடி சென்றவள் நீதான்..!
இன்று-
மண்மூடி கிடக்கும்
என் கல்லறைக்கு முன்னே
முகாரி ராகம் வாசிக்கும்
முகமில்லா காற்றுக்குகூட
என் காதல் புரிந்துவிடும் - ஆனால்
பூவே உன்னை பூஜித்த
பூபாலன் இவன் காதலை
புரியாமல் பூமியிலே புதைத்துவிட்டு
புதுமாப்பிள்ளையோடு போனாளே என்
பூங்குயிலே புதுவெயிலே..!!