நினைவலைகள்-வித்யா

நினைவலைகள்.....!-வித்யா
அந்த தடிமனான
நாட்குறிப்பின் நடுவே
உயிர்வாழும் ஒற்றை
ரோஜா இதழ்....
பாதங்கள் பட்டு
நுனிக் கருகிய
புல்வெளிகள்
கருகிய
சருகுகளென
உதிரும் கண்ணீர்
நீலப்புடவை
உடுத்திய
தென்றல்
இவை யாவற்றிலும்
என் நினைவுகள்
நீ காணினும்
எனக்கான உன்
முதல் கவிதையின்
முற்றுப்புள்ளியில்
இன்றும் நான்
வாழ்ந்துகொண்டே
இருக்கிறேன்
அதே காதலுடன்........!!