அவளுடன் நான்-1

ஆயிரம் ஆயிரம்
எதிர்பார்ப்புகளிடையே
அவளுடனான முதல் சந்திப்பு...

ஆயிரம் கோடி நிலவுகள்
என் முகத்தில் மலர்ந்தபடி
அப்படியொரு பொலிவு...

என்றும் - என் கைகளை
அலங்கரித்து வரும்
அலைபேசியையும்
அன்று மறந்தேன்...

வேகத்தில் விவேகம் பொருத்தி
அலைபேசியை எடுத்து
வந்தவுடன் குறுந்தகவலில்
என் வரவை அவளிடம் மொழிந்தேன்...

இன்று மட்டும்
ஏதோ புதிதாய்
நேரம் தவறாமையை
கடைபிடிக்க வேண்டுமென்று
மனம் துடிதுடித்துக் கொண்டது...

படபடப்புகள் அதிகம்
நிறைந்த அப்படியோரு
பயணமது...

உணர்வுகள் உடைந்துவிடுமோ
இல்லை
உயிர் தான் போய்விடுமோ
என்று தெரியாத நேரமது...

பேருந்தின் சன்னல் கம்பிகளிடையே
ஏதோ பார்த்தபடி
சித்தம் தொலைத்த
சிந்தனை கவிதையது...

முழு நாத்திகன் நான்
அன்று மட்டும்
கிலோமீட்டர் கல்
என் குலசாமியானது...

உயிரிடத்தில் சிறு சிறு
வெடிப்புகள் நிகழ்ந்தன
எனக்கு புரிந்துவிட்டது
இன்னும் சில நொடிகளில்
இதயம் செயலிழக்க போகிறதென்று...

கட்டுக்கடங்காத துடிதுடிப்பை
சமாலித்து எப்படியோ
பேருந்து நிலையம்
வந்தடைந்தேன்....

முன்பு சொன்னதைவிட
இப்போது முன்னூறு மடங்கு
அதிகமானது என்னிதய துடிப்பு...

பேருந்தை விட்டு இறங்குவதா
இல்லை -என்னை இங்கேயே
கருணைகொலை செய்து விடுவதா
என்று தெரியாமல் நானிருக்க...

என்னவளிடமிருந்து........

எழுதியவர் : கோபி (12-Oct-14, 11:16 am)
பார்வை : 148

மேலே