புரியாத புதிர்

புத்தகத்தை பலமுறை படித்தும்
நினைவில் இல்லை ஒன்றும்
உன்னுடன் பழகிய ஒவ்வொரு நொடியும்
மனக்கண்ணில் திரையிட்டு காட்டுகின்றன
விசித்திர இனிமையாக தோன்றுகிறது

என் பெற்றோரை விட நீ வைத்த
பெயர் தான் அதிகம்!
என் பெயர் கொண்டு ஒரு போதும்
அழைத்ததில்லை நீ
புதுவித கோணத்தில் பார்க்கிறாய் என்னை!

உன்னை பற்றிய அனைத்தையும்
தேடி தேடி படிக்கிறேன்
மனதுக்குள் புன்னகைக்கிறேன்

உன் உலகில் என்னை
இணைக்க முயற்சிக்கிறேன்.
உனக்காக யாவும் செய்ய துணிந்தேன்!

உன்னால் உனது உலகம்
எனது உயிராகி விட்டதே!

உன்னை என்னிடத்தில் இருந்து
பிரிக்கும் நொடி என்
மரணமாக இருக்க வேண்டுமென்று
என் இறைவனை பிரார்த்திகிறேன்.

இந்த உறவுக்கான பெயரைத்
தேடி அலைகிறேன்.
புழபடவில்லை எனக்கு
தெரிந்தால் சொல்லிவிடு என்னை
நான் இலக்கும் முன்!!!!!

எழுதியவர் : மைதீன் (14-Oct-14, 12:40 am)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 113

புதிய படைப்புகள்

மேலே