வேண்டும் நீ

செஞ்சூரியனில் குளித்திட்ட
செங்கொன்றை பூக்களின்
இதழ் மடல்களில் என்
வெட்கச்சிவப்பு சேமித்தேன்

பனிமுத்துக்களில்
புன்னைகை சேர்த்தேன்
பார்வை பறித்திடும்
நேரமதனில் பரிசளிக்க

இலை தொடும் மலர்களாய்
அரவமற்ற நின்
ஞாபகத்தீண்டல்களில்
குதித்தோடும் காதல் அலை

யாரோ ஒருவர்
ரசனையில் நான் வாழ
எனக்கெனப் பிறந்திட்ட
உன் பிம்பம் ஏன் என்
விழிகளில் இன்னும் விழவில்லை

தகி தகிக்கும் விழிச் சூட்டை
ஆற்ற தவணை முறையிலாவது
உன் வருகை வேண்டும்

வானவில் தூவிய
நட்சத்திரப் பூச்சிதறல்களில்
நான் மட்டும் தனித்தபோது
வெள்ளை நிலவாய் எனைக்
கொள்ளையிட்டுக் கொண்டாய் நீ!!

எழுதியவர் : கார்த்திகா AK (14-Oct-14, 12:31 am)
Tanglish : vENtum nee
பார்வை : 376

மேலே