தீபாவலி
இல்லாதவன் வீட்டில்
ஆண்டில் அநேக நாட்களில்
தீபாவளி
பட்டாசாய் கவலைகள்
வெடிக்க
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கையெட்டும் இனிப்புகள்
தீபங்கள் கையில் ஏந்த
நினைக்க
எரிபவைகளோ
தீபந்தங்கள்
தீபாவளிகள்
கடக்கும் வேளைகளில்
தீயப்பா வலிகள்
என்ற புலம்பல்களே
மிச்சம்