பெண்மையின் சுகந்தம்- வித்யா
பெண்மையின் சுகந்தம் -வித்யா
பெண்மையின் ஆன்மா
காற்று போல......
அது நீரையும்
நிலத்தையும்
பிரித்தே வைக்கும்...!!
நட்சத்திரங்கள் எரிக்கும்
மண்ணெண்ணெய் வாசத்திலும்
மல்லிச் செடி விரும்பும்
கள்ளிப்பூ வாசத்திலும்
வார்த்தைகளில் ஒளிந்துக் கொள்ளும்
புதுப் புத்தக வாசனையிலும்
மழைத்துளி உறிஞ்சும்
மண்ணின் வாசத்திலும்
தேன்துளி பருகும்
பட்டுப் பூச்சியின்
வண்ணத்திலுமே
பதுங்கியிருக்கிறது....
பெண்மையின் சுகந்தம்.......!!