வாழ்க பெண்ணீயம் வளர்க பெண்ணியம்

வாழ்க பெண்ணீயம் ! வளர்க பெண்ணியம் !

பால்வாடி பாடம் ,பாலபாடம்,
பள்ளி பாடம் முட்டும் மட்டுமே
படித்து வந்த பட்டு தென்றல்கள்

பட்டய படிப்பிலும் , பட்ட படிப்பிலும்,
பற்பல படிப்பிலும்
பட்டையை கிளப்பி வரும்
காலம் இது பாப்பா !.....

பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று போலியாய்
கேலிகூத்து கதைபேசுபவரை கோலி அடி தோழியே !

துறை பல கண்டும்,கால்பதித்தும்,வெற்றி கொண்டும்
அத்துறைகள் துரைகளின் கோட்டை எனும் கொக்கரிப்பை
துகள் துகளாக்கி தகர்த்தெறி கண்ணே !

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு ??
என்றதும் ஒரு காலம் உண்டு
அவை அனைத்தும் ஒரு காலம், கடந்த காலம்
காலபோக்கில் கடந்து வராமல், நொண்டி அடிக்கும்
சில நொண்டிகளின் நொந்தல் வரிகளை
நோகாமல் நலுங்காமல் கந்தல் ஆக்கிவிடு கண்மணியே !

முந்தைய,காலத்தில் தான் முடக்கி வைக்கப்பட்டு இருந்தீர் !
அக்காலத்தில்,பெண்கள் பெண்களாய் பணிவாய் பண்பாய்
பொறுமையில் பூமிக்கு ஒப்பீடாய் ஒப்பிடபட்டே
அமுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வந்தீர் ....

இன்றோ, உங்கள் வளர்ச்சியோடு ஒப்பிடபட்டால்
அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பும் ,
தங்க விலை விலையேற்றம் கூட வீழ்ச்சி அடையும்
அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி ....

படிக்கின்ற போது படிப்பும் ,
படைப்பை, படைக்கும் போது படைப்பும்
ஓய்வின் போது ஓய்வும் , விளையாட்டின் போது
விளையாட்டு ,என பகுதி பகுதியாய் பகுத்து,வகுத்து
வாழ்வதால், பகுத்தறிவில் நீ பாதி பெரியார் !

தன் தனிவாழ்விலும் சிறந்து, போது வாழ்விலும் கலந்து
தளர்வில்லா மன உறுதியோடு காய் நகர்த்தி
காரியம் சாதிப்பதால் நீ பாதி கலைஞர் !

எது எப்படியோ ?
(சில) முதுகெலும்பில்லா ஆண்கள் சமூகம் இருக்கும் வரை
உங்கள் வளர்ச்சியினை, மனிதன் மட்டும் அல்ல
இருப்பதாய் கருதப்படும் அந்த ஆண்டவன் வந்தாலும்
தடுக்க முடியாது !

வாழ்க பெண்ணீயம் ! வளர்க பெண்ணியம் !

எழுதியவர் : (28-Oct-14, 12:04 pm)
பார்வை : 184

மேலே