என்னவன் பிரிந்து சென்றான்
என்னை
சம்மதிக்க வைத்து ...
என்னவன் பிரிந்து சென்றான் ...
நிச்சயம் என்னவனை ....
ஊரார் புறக்கணிக்க மாட்டார்கள் ....
துற்றவும் மாட்டார்கள் ....!!!
என் உடலில் பரவும் ...
காதல் நோய் என்னவனை
நல்லவன் என்று கூற ..
உதவும் என்றால் -என்
உடலில் காதல் நோய் ...
பரவட்டும் .....!!!
திருக்குறள் : 1190
+
பசப்புறுபருவரல்
+
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 110