நீர் உண்மையில் நல்லவரே

உன்னை பிரிவதற்கு ...
நான் தானே விடை தந்தேன் ....
என்னவனே நீ என்னை ...
சம்மதிக்க வைத்தாய் ...
நீர் உண்மையில் நல்லவரே ...!!!

நீவீர் ...
நல்லவராக இருப்பதால் ..
என் மேனியில் காதல் ...
நோய் (பசலை) படர்கிறது ....
அதிலும் ஒரு சந்தோசம் ...
உன்னால் தானே படர்கிறது ....!!!

திருக்குறள் : 1189
+
பசப்புறுபருவரல்
+
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 109

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-14, 9:07 pm)
பார்வை : 126

மேலே