தாய்,தந்தை அன்பு
தந்தை தன்னை வருத்தி ,என்னை வடித்தவன்
தாய் ,வடித்த உயிர்க்கு வடிவம் கொடுத்தவள்
உருபெற்ற என்னை உருவாக்கவே ,தவம் செய்வாள் தனியே 10 மாதம்
எட்டி உதைத்தாலும்,திசை புரண்டாலும் தவிக்கும் தாய்க்கு
தந்தை சொல்லும் ஆறுதல் என் பிள்ளை என்னை போன்றே இருக்கிறான் என்று
பிறந்தேன் இன்று.தாயின் தவத்தாலும் ,தந்தையின் வரத்தலும்
பசித்தால் பாலுட்டும் தாய் இங்கே ,படுக்க தட்டி கொடுக்கும் தந்தையின் மார்பு அங்கே
வளர்த்தேன் தாயின் அன்பால் ,நடந்தேன் தந்தையின் அறிவாள்
கண்ணில் ஓர் தூசு பட்டாள் கண் கலங்கும் முன்னே, கலங்கும் தாயின் அன்பிற்கும் ,
அத்தூசியை தன் கண்ணால் எரிக்கும் தந்தையின் அன்பிற்கும் ஈடாகுமோ !
இருவரியில் நான் அவர்களை அலைகையில் (அப்பா ,அம்மா ) என்று .......