எவ்வினம் அந்த சீவனம்------அஹமது அலி

கண்ணின் கருமணியில்
மின்னலடித்த கணம்
என்னின் உடலெங்கும்
பின்னலிட்டதே
அந்த பூவனம்.!

= *=*=

மண்ணின் வாசனை
மாறாத மயக்கம் தந்ததாய்
நாசியில் நுழைந்ததே
அந்த நறுமணம்.!

=*=*=

விண்ணின் வீதியில்
உலவியது போதுமென்று
என்முன்னே உலவ வந்ததோ
அந்த மதி வதனம்.!

=*=*=

பண்ணில் இசைபாடி
தென்றல் தேரேறி
என்னில் உறவாட வந்ததோ
அந்த மோகனம்.!

=*=*=

தன்னில் தனியே பிரிந்து
என்னையும் துணைக்கழைத்து
பின் தொடர காரணமும்
அந்த சீவனம்.!

=*=*=

இக்கணமும் எக்கணமும்
சிக்கனமில்லா சிந்தையை தோண்டி
சீற்றத்தை தூண்டுவதும்
அந்த பெண்ணினம்.!

எழுதியவர் : அஹமது அலி (6-Nov-14, 7:23 am)
பார்வை : 162

மேலே