எங்கள் வாழ்விற்கு ஒளி தந்த அண்ணல்

எங்கள் வாழ்விற்கு ஒளி தந்த அண்ணல்!

ஓடி ஒலிந்த கூட்டத்திற்கு
ஒளி விளக்கேற்றியவன் நீ!
குனிந்திருந்த கூட்டத்தை
நிமிந்து நடக்க வைத்தவன் நீ!
சிலர் சட்டை கழற்றியபோது
எங்களுக்கு சட்டை அணிவித்தவன் நீ!
'இவர்களுக்கு மேல்துணி எதற்கு?'
என்றே 'அந்த அவர்கள்' நினைத்தபோது
துணியுடன் துணிவையும் அணியவைத்தவன் நீ!
ஆயிரமாண்டு அடக்குமுறை
அவ்வளவு சீக்கிரம் முடியா தென்றே
அடிபட்ட அடித்தட்டு மக்களுக்கு
மேல்தட்டு வேண்டி முதல் ஒதுக்கீடு
முதல் கிடைக்கச் செய்வதன் நீ!
மஹாத்மாக்கள் ஒருபுறம்
இந்திய அரசியல் விடுதலை
இன்னலோடு வாங்கி தந்தபோது
சமூக விடுதலைக்கு வித்திட்டவன் நீ!
இன்று பலருக்குத்தெரியா து
நீ வந்திருக்கா விட்டால்
எந்த அலுவலகத்திலும்
நாங்கள் இருக்கமுடியாது!
இந்தியாவை முழுமையாக
இதயபூர்வமாக அறிந்தவன் நீ!
மொழிவாரி மாநிலம்தான்
இந்திய கூட்டாட்சியின்
இருள் நீக்கும் வழி என
கூட்டாட்சியில் கூடி வாழ
வழி வகுத்திட்டவன் நீ!
வேறு வழியில்லை
இந்தியாவை கூட்டாச்சியில்
ஒன்றிணைக்க என்றறிந்தே
மொழியை ஒரு இணைக்கும்
கருவியாய் இணைத்திட்டாய்!
உன்னைவிட ஒரு தேசியவாதி
இதுவரை இந்த நாட்டில் இல்லை!
உண்மை ஒன்றும் உயர்ச்சி இல்லை!
புகழ்ச்சி இல்லை!
இந்திய ஒற்றுமை என்பது
எல்லோர்க்கும் எல்லாமும் என்பதே
என்றே புரிய வைத்தவன் நீ!
இந்திய சுதந்திரம் அடைந்ததும்
சிலர் பதவி எடுத்துக்கொண்டார்
சிலர் நாட்டின் தந்தையானார்
சிலர் நாட்டின் பிரதம அமைச்சரானார்
சிலர் ஆசிய ஜோதியானார்
ஒருவர் மகாத்மாவனார்
பலர் என்னவானார் என்றே தெரியவில்லை!
ஆனால் நீ மட்டும்தான்
எங்களுக்கு உரியவனாய்
அண்ணல் ஆனாய்!
நீ வாழ வேண்டும்
ஏனென்றால்
நாங்கள் வாழ வேண்டும்!
நீ இன்று மிகவும் அவசியமாய் வேண்டும்!
இன்றும் தனியாக சுடுகாடு
செத்து தொலைந்த பிறகுமா
தனித்து ஒதுக்கி வைத்து!
ஆணவக்கொலை செய்து
மீசை வைத்தால் ஒருமாதிரியாகப்பார்த்து
என் மீசைதானே
என் மயிர்தானே
உனக்கு என்ன மயிர் வந்தது என்றால்
அடித்து உதைத்து
இதற்கெல்லாம் நீ வேண்டும் அண்ணலே
உன்னை பலர் ஒரே முறைதான்
நினைக்கின்றார்
இன்றுமட்டும் தான் பிறகு
நடக்கும் வன்முறைகள்
எங்களுக்கு எதிராக !
இன்று நீயும் அந்த மோகன் தாஸும்
எல்லோருக்கும் சொந்தமானவர்கள் !
ஏன்? எல்லோருக்கும் எங்கள் வாக்கு வேண்டும்!
ஆதலால் நீ வேண்டும் அந்த மகாத்மாவும் வேண்டும்!
எந்த மதம் ஒதுக்கி வைத்ததோ
அந்த மதத்திலிருந்துதே
இந்த உயிர் போகாதென்றே
சாதியில்லா புத்தத்திற்கு
சாதி ஒழிய புத்தாக்கம் தந்த நீ!
எங்கள் வாழ்விற்கு ஒலி தந்த அண்ணல்!

Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் - மொழிக்கு கல்வி
தேசிய பள்ளிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புது தில்லி 110016
Dr. R Meganathan
Professor _ Language Education
Department of Education in Languages
National Council of Educational Research and Training (NCERT)
Sri Aurobindo Marg, New Delhi 110016
Mob: 09968651815

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (14-Apr-25, 6:43 pm)
பார்வை : 25

மேலே