இடம் பெயர்தல்

அறிவிப்புகளேதுமின்றி
எனதத்தனை
உள் வெளிப்
பிரகாரங்களிலிருந்தும்
வெளியேறிக் கொண்டிருக்கிறாய் -
கர்ப்பக்கிரகத்திலிருந்தும்
தான் !

சிலையற்ற
நடுநிசிக் கொடுமையினூடாக
எனதாலயம்
ஸ்தல விருட்சங்களின்
தளிரிலைகளிலிருந்து
விசும்பிக் கொண்டிருக்கிறது !

நாம்
நம்மிலிருந்து நம்மை
விடுவித்துக் கொண்டொமென்பதைத்
தவிர
வேறெதுவும்
நிகழ்ந்து விடவில்லை யென்பதை
உனது
ஜலம் தெளித்து
கும்பாபிசேகம் நடத்திய யெனது
கோபுரக் கலசங்கள்
மீது
இறக்கை உலர்த்தும்
பறவைகள்
நெக்குருகி நெகிழ்கின்றன !


உனது விருப்பம்
வெளியேருவ தாயின்
அன்பினூற்றுப்
பெருகிய
எனது தெப்பத்தினுள்
மிதந்து
பொதுமிப் போய்
கிடக்குமெனது
இதயத்தினையெடுத்து
நேசத்தினத்தனை
ஈரத்தினையும் பிழிந்து
காயப் போட்டுப்
போய்விடு -
இறுதியிலுனது
உள்ளங்கை ரேகைகளில்
ஒட்டியிருக்குமெனது
இதயத்தின் ஈரத்தினை
என்ன செய்வதாய்
உத்தேசம் ?

எழுதியவர் : பாலா (9-Nov-14, 8:26 pm)
பார்வை : 109

மேலே