நாம் எங்கே போகிறோம்

பழைய சாதம் மறந்து..
பீசா, பர்கர் சாப்பிடுகிறோம்...
தமிழில் பேசுவது கேவலம்
என்று ஆங்கிலத்தில் ,
பிதற்றுகிறோம்..
அதையே பெருமையாக கருதுகிறோம்...
உறவுகளை தொலைத்து விட்டு..,
பேஸ்புக்கில் உறவுகளை தேடுகிறோம்..
தொலைக்காட்சி தொடர்களில் ,
நம்மை இழந்து விட்டோம்...
மின்சார கருவிகளில் உடல் உழைப்பை,
மறந்து விட்டோம்...
உலகத்தையே கைகளில் கொண்டு வந்து விட்ட,
கணினி யுகத்தில்...,
நம்மையே நாம் மறந்து விட்டோம்...
வெள்ளையனிடம் அடிமைப்பட்டுகிடந்தோம்...
இப்போதும் அடிமைப்பட்டு கிடக்கிறோம்..
அவன் நாட்டு பொருட்களில்...
மனிதநேயம் தொலைத்துவிட்டு...
மனசாட்சியை தொலைத்துவிட்டு...
உண்மைகளை மறைத்து விட்டு..
உழைப்பை மறந்து விட்டு...
உணர்வை இழந்து விட்டு...
நாம் எங்கே போகிறோம்...?
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி...
பொன்னூர் மலை - 604 505
வந்தவாசி.