என் வலிகளில் சில

என்னவனே...

என் மௌனத்திற்கு
சொந்தமானவே ....

என் தனிமையின்
நினைவுகளுக்கு சொந்தமானவே...

என் காதலுக்கும்
கண்ணீற்கும் சொந்தமானவே....

என்னில் மறையா
நினைவுகளுக்கு சொந்தமானவே...

என்னில் நிறைந்திருக்கும்
வலிகளுக்கு சொந்தமானவே...

உன் மௌனத்தால்
சிதறிகிடக்கும் நம்
காதல் நினைவுகளை கண்ணீரால்
சேகரிக்கிறேன் என்னில்....

உணர்ந்துக்கொண்டேன் ...

பிரிவு மட்டும் நம்மில்
நிலைத்திருக்கும் என்றும்....

வார்த்தைகளால் உணர்த்திய
என் அன்பை நீ உணரபோவதில்லை ....

உனக்காக என்னை மண்ணில்
மறைக்க தாயரானேன் ....

என் மரணத்தில் கூட உனக்கு
புரியபோவதில்லை ...

என் மனம் தவிப்பது
உன் அன்புக்கு மட்டும் தான் என்று ...

புரியாமலே நீ....

புரிந்துகொள்வாய் என்ற
நம்பிக்கையிலே நான்....

காத்திருக்கிறேன் ...
உன் வரவை எண்ணி....

எழுதியவர் : சகிமுதல்பூ (18-Nov-14, 6:44 pm)
பார்வை : 241

மேலே