என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -12

அழகு என்பது காணும்
கண்களில் இல்லையடி
காண்பவர் தம்
உள்ளத்தில் உள்ளது எனும்
உன்னத உண்மை
அறிந்ததில்லையோ ??

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பகலோ, இரவோ
சூரியனோ, நிலவோ
அப்பாவி எனைப்போல்
தொடாமல் தொடர்ந்து வரும்
நிழலை தொடவிடாமல்
துரத்துவதுதானே உந்தன்
வழக்கமும் பழக்கமும் ....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மிச்சமாய்
சொச்சமாய்
எச்சமாய்
என்னை
பிடிக்கும் போல
பளிச்சென
ஒரேயொரு முறை கூறிவிட்டாய்
" பிடிக்கும் " என
லட்சமாய்
கோடியாய்
எக்கச்சக்கமாய்
உனை எனக்கு பிடிக்குமே
எப்படி சொல்வது அத்தனை முறை ??

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கருப்பு பெண்கள்
சிரிக்கும் பொழுது தான்
முத்துப் பற்களுக்கே
முதன்மை இடம் கிடைக்கும் ......என்பதில்
கருப்பு என சொன்னதை
நீ நிறமாய் காண்கிறாய்
கரு - ThemE பூ - Flower என்று
நான் சொன்னதை
நீ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை .

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அடடா என்று ரசிப்பதை
மறுபரிசீலனை செய் !!
நீ ஆட டா ... என்று ரசித்து
ருசித்து ரசிப்பதை
உலக மகளீர் சங்கத்தினர்
உன் மீது மான நட்ட வழக்கிட
வாய்ப்புண்டு !!
அட டா என்பது
ஆண் பாலினை குறிப்பதாம் .

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சிரிப்பது அழகு தான்
சிரிப்பின் பொழுது கொஞ்சமாய்
இதழ் விரிப்பை குறைத்துக்கொள் !!
பாவம் கோடி பூக்களின்
காலா கால பிழைப்பு
பாழாய் போய்விடக்கூடும் !!:

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீ அழகாய் ரசிக்கும் பொழுது
அட டா என மெய் மறந்து கூறுவதால்
பெண்கள்இனம்
உன்னை கோவித்துக்கொள்ள
வாய்ப்புகள் உண்டு
பெண்ணுக்கு பெண்ணே
பேராசை கொள்ளும் பேரழகெல்லாம்
படைத்தவள் நீ என்பதால் .....

எழுதியவர் : (27-Nov-14, 3:01 pm)
பார்வை : 130

மேலே