விருப்பம் இல்லை என்றாவது சொல்லடா

அன்பே அன்பே...
என்னை விட்டு செல்லாதே...
உயிரும் உருகி விடுமே....
நிழல் கூட உன்னை தான் தொடர்ந்து வருமே....

சில நேரம் அருகில் வந்து சந்தோஷம் தந்தாய்.....
சில நேரம் விலகி சென்று என்னை ஏன் கொன்றாய்....
பேசாமல் மௌனத்தாலே காதலை தந்தேன்....
சொல்லாமல் ஏனடா நீ எங்கேயோ சென்றாய்....

பகல் நேர நிலவாய் நான் உன் அருகில் வந்தேனே....
ஜன்னல்கள் சாத்தி விட்டு ஏனோ சென்றாயே....
மீண்டும் நீ ஜன்னல் திறப்பாய் என்றே காத்திருந்தேன்.....
விடை ஏதும் சொல்லாமல் நீ மௌனம் காக்கின்றாய்.....

விருப்பம் சொல்ல தான் தயக்கம் ஏன்...
குறைந்த பட்சம்.....
விருப்பம் இல்லை என்றாவது சொல்லடா தயங்காமல்.......

எழுதியவர் : சந்தியா பிரியா (28-Nov-14, 1:57 pm)
பார்வை : 81

மேலே