தொலைந்து போனது

அவன் அவளை
விழுந்து விழுந்து
காதலித்தான்..
உயிராக நினைத்தான் ..
பிடிவாதமாய் மறுத்தாள்..
பின் ..
வரன் என்று பெண் பார்க்க வந்த
இன்னொருவன்..இவளோடு
தனியாகப் பேச வேண்டுமென்றான்..
அவன் கேட்ட கேள்வி
..
இது வரை காதலில்
நீ விழுந்ததில்லையா
என்பதுதான்..
இல்லை என்றாள் அவள்..
அதற்கு ..
அவன் சொன்ன பதில்

..
என்னை விழுந்து விழுந்து
காதலித்தாள் ஒருத்தி..
எங்கள் சாதியுமில்லை..
எனக்கு கட்டிக் கொடுக்க
அவர்களுக்கு வசதியுமில்லை
உன்னைப் போல் அழகுமில்லை..
உங்களைப் போல் அந்தஸ்துமில்லை.
ஏதோ நான் செய்த புண்ணியம்
நீ கிடைத்தாய்!..
..
என்ன கீழே தேடுகிறாய் என்றான்.
வைரக் கல் ஒன்றை
தொலைத்து விட்டேன்..
தேடுகிறேன்.. என்றாள்..!
..
என்னை பிடித்திருக்கிறதா
என்றவனை
ஏறிட்டு பார்த்து சொன்னாள்..
பிடிக்கவில்லை என்று!

எழுதியவர் : கருணா (2-Dec-14, 2:57 pm)
Tanglish : tholainthu ponathu
பார்வை : 501

மேலே