நண்பன்
நல்ல நாள் அதுவுமா கோவிலுக்கு போகலாமென்று போய் கொண்டிருகும் போது எதிரே வந்த நண்பன் ஒருத்தன்
"எங்க போகிறாய்?" என்று கேட்டான்.
'ஆஹா... நல்ல நாளும் அதுவுமா அபசகுணம் மாதிரி கேட்கிறனே' என நினைத்துக் கொண்டு
“கோவிலுக்கு போறன் மச்சி...” என்றேன்.
“என்னது கோவிலுக்கா? ” ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஓமடா இண்டைக்காச்சும் கோவிலுக்கு போவம் என்றிட்டு....”
“எதுக்கு...?” - அவன்
“கோவிலுக்கு எதுக்கடா போவாங்கள். தரிசனத்துக்கு தான்” - நான்
“அதானே பார்த்தேன் நீயாவது கோவில் கும்பிட போறதாவது” - அவன்.
.
.
.
.
.
# ஆமா நான் என்ன சொன்னேன் அவன் என்ன சொன்னான்.
நாம மாறணும்னு நினைத்தாலும் இவனுக விடமாட்டங்க போல.