வருத்தம்
வெந்நீர்க் கற்றை
மழலை உடலில் பட்டு
நிற மாறுதல் படர்க்கை கண்டு
துறவு பூண்டு உருவம் காணும் குணம் !
பாலாடை கள்ளிப் பாலில்
முத்துக் குளித்து முத்தாய்
மாறவா போகின்றது ?
காற்றுக் குமிழ்கள்
கொதி நீரில் துறவு கொண்டு
மட்டும் கொள்கை மாற்றம் செய்யுமா என்ன ?
உள்ளுறை வெப்பம்
பாட்டிசைத்து பதியப் பாடல்
கொண்டு என்ன கவிதை நூலையா படைக்கப் போகின்றது ?
ஆதவன் குரல்
அந்திமாலை குறைந்து மட்டும்
ஓசை பனித்துளியாய் மட்டுமே
படர போகின்றது !
பாறைத் துளியின் பகிட்டு
மட்டும் வண்டல் மண் சாரலைய
எடுத்துரைக்கப் போகின்றது !
நீர்த்திவலைகள் காற்றின் கைவண்ணம்
பட்ட பிறகு
கொள்கைக் குறையால் செய்யப் போகின்றது !
நடுக்கடல் அலை மட்டும்
என்ன தனிக்கட்சிக் கொள்கைகளையா
பூண்டு ஆட்சி நடத்துகின்றது !
கவிதைத் தாண்டல் என்ன
கொள்கைக் கதைகளையா கொண்டு
தூறல் கவிதையை எடுத்துரைக்கின்றது !
இருட்டு
பகல் வெளிச்சம் காலச் சேவகர்களின்
பணிமனையில் சர்ப்பத் தேவர்கள்
குண மாற்றமா கொள்ளப் போகிறார்கள் !
குணம் மாறா கொண்டது
மனம் மாறும் கொண்டது
வருத்தம் கடல் போன்றது
தூரப் பார்வை மகிழ்ச்சி
நெருக்கம் சோகக் கவிதை !