வருத்தம்

வெந்நீர்க் கற்றை
மழலை உடலில் பட்டு
நிற மாறுதல் படர்க்கை கண்டு
துறவு பூண்டு உருவம் காணும் குணம் !

பாலாடை கள்ளிப் பாலில்
முத்துக் குளித்து முத்தாய்
மாறவா போகின்றது ?

காற்றுக் குமிழ்கள்
கொதி நீரில் துறவு கொண்டு
மட்டும் கொள்கை மாற்றம் செய்யுமா என்ன ?

உள்ளுறை வெப்பம்
பாட்டிசைத்து பதியப் பாடல்
கொண்டு என்ன கவிதை நூலையா படைக்கப் போகின்றது ?

ஆதவன் குரல்
அந்திமாலை குறைந்து மட்டும்
ஓசை பனித்துளியாய் மட்டுமே
படர போகின்றது !

பாறைத் துளியின் பகிட்டு
மட்டும் வண்டல் மண் சாரலைய
எடுத்துரைக்கப் போகின்றது !

நீர்த்திவலைகள் காற்றின் கைவண்ணம்
பட்ட பிறகு
கொள்கைக் குறையால் செய்யப் போகின்றது !

நடுக்கடல் அலை மட்டும்
என்ன தனிக்கட்சிக் கொள்கைகளையா
பூண்டு ஆட்சி நடத்துகின்றது !

கவிதைத் தாண்டல் என்ன
கொள்கைக் கதைகளையா கொண்டு
தூறல் கவிதையை எடுத்துரைக்கின்றது !

இருட்டு
பகல் வெளிச்சம் காலச் சேவகர்களின்
பணிமனையில் சர்ப்பத் தேவர்கள்
குண மாற்றமா கொள்ளப் போகிறார்கள் !

குணம் மாறா கொண்டது
மனம் மாறும் கொண்டது
வருத்தம் கடல் போன்றது

தூரப் பார்வை மகிழ்ச்சி
நெருக்கம் சோகக் கவிதை !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (12-Dec-14, 3:11 pm)
Tanglish : varuththam
பார்வை : 601

மேலே