பூவும் - பெண்ணும்

பூவோ மென்மையானது
அதனிடம் ஒப்பிட்டு
கூறுவதோ பெண்மையை!!..

இப்படி,
பெண்மையின் மென்மையை
மேன்மையாக மெச்சிய - எனை
இன்றோ ..
அவள் இதயத்தை கல்லாக்கி
என் நெஞ்சத்தை புண்ணாக்கி
வேரோடு பிடுங்கி சென்றாள்.....
"என் காதலை அல்ல ..."
"என் உயிரை !!...."

எழுதியவர் : பிரதீப் நாயர் (18-Dec-14, 2:22 pm)
பார்வை : 253

மேலே