எதுவரை நீ-வித்யா
எதுவரை நீ..??வித்யா
ஒருவானம் பாடியின்
துணைத்தேடலாய் நீள்கிறது
என் ராகம்
என் மென்சோகம்
புன்னகை உதிர்க்க
நீ புதைந்து போனதாய்
சொல்லியதாக நினைவில்
புதைந்தது
புன்னகையிலா
மென் சோகத்திலா
என்பதெல்லாம்
கேட்க நேரமில்லாமல்
உன்னோடு
உன் காதலையும்
கடந்து போன நொடிகள்
இப்போதெல்லாம்
கேள்வி கேட்க
ஆரம்பித்துவிட்டன
பக்கத்து வீட்டில்
வரதட்சனைக் கொடுமை
எதிர் வீட்டுக்காரன்
சந்தேகப்பேர்வழி
ஒரு சிறுகதை நாயகன்
பெண்கள் பைத்தியம்
என இன்ன பிற
பார்த்தவை
கேட்டவையெல்லாம்
நெஞ்சோடு நிழலாட
எண்ணங்கள் எங்கெங்கோ
பயணிக்க
வழிநெடுகிலும் சிதறிய
என் ஏக்கங்கள்
என் வாழ்வில்
எதுவரையில்
எதுவாக
நீயிருப்பாய்
எனக் கேட்டுகொண்டே
இருக்கிறது
வேண்டுமானால்
என் இதயத்தின்
ஆழத்தில்
அதிக அழுத்தத்தில்
இருக்கும் காதலிடம்
கேட்டுப்பார்
எதுவரை நீயென்பது
அப்போது புரியும்.....!!