இழுத்தடிக்கும் பயணமே உனக்கு ஒரு முற்றுப் புள்ளி

தினந்தோறும் ஒரு புயலில் -எனக்கு
மட்டும் தென்றல் காற்று சில்லென்று - இல்லை
எல்லாம் சுள்லென்று !

காலையில் பேரூந்து பயணத்தை
நினைத்தாலே என் தாயின் -சுவை
கொண்ட சுடு தேநீரும் சுட்டாறிய தேநீராக
மாறுகிறது போல உள் உணர்வு !

காசு இல்லாம பயணிக்கும்
பயணிகளுக்கும் -பேரூந்து
ஊழியர்களுக்கும் இடையிலான
கைகலப்பை பார்த்து கலங்கத் தேவையில்லை

பொண்ணுங்கள உரசும்
நாய்ப்பிறவிகள் செருப்பால் கன்னங்களில்
வேண்டும் கைதட்டுக்களை பார்க்கத் தேவையில்லை

அலுக்காம தினமும்
ஆறு மணிப் பேருந்தில் ஏறி
கண்களால் காதல் வளர்க்கும் ஜோடிகளை
பார்த்து கடுப்பாகத் தேவையில்லை நினைக்கவும் தேவையில்லை

அதிகாலையிலே சுத்தமாக தங்கள்
கைவரிசையைக் காட்டும் கள்வர்களை
பிடிக்கவும் தேவையில்லை அடிக்கவும் தேவையில்லை

விலங்கு வேளாண்மை செய்யும்
ஐயாவின் ஐந்து ஆசைக் கோழிகளின்
கொக்கரிக்கும் சத்தத்தையும் கேட்கத் தேவையில்லை

பள்ளி செல்லும் பிள்ளைகளின்
அரட்டைக்கும் -பின்
இருக்கையில் இருந்து கிழவிகளுக்கு
புள்ளி போடும் புறம்போக்குகளின்
அரட்டைக்கும் செவி கொடுக்கத் தேவையில்லை

அருகாமை இருக்கையில் இருக்கும் -புது
மணப் பெண்ணு -தன் புதுக்
காதலுடன் தொலை பேசியில் பேசும்
கொச்சை வார்த்தளையும் -அதற்கு
அவள் வெளிக்காட்டும் முக நக வெளிப்பாட்டையும்
சகித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை

அதிகாலைப் பேரூந்தின்-அத்தனை
பிரச்சனைகளையும் தலையில தூக்கி வைச்சா
அலுவலகத்தில் வழுக்கள் பாறை மண்டையன் -எனை
தூக்கில தொங்க வைப்பான்

இத்தனைக்கும் ஒரே வழி
:தனி வழியல்ல :

காதுகளில் லோலாக்கு போல
இன்னிசை பாட்டு மழை
காதுகேள் பொறி மூலம் -இதுவே
கவலைகள் மறக்க வைக்கும் கருவி

வியர்வை சிந்தினாலே
உயர்வை எட்ட முடியும் என்றால்
இழுத்தடிக்கும் என் பயணத்தை இதமாக மாற்றுகிறேன்
காதுகேள் பொறிகளின் உதவியுடன்


சத்யா மேடம் :)
நன்றி

எழுதியவர் : keerthana (25-Dec-14, 9:43 pm)
பார்வை : 133

மேலே