தேவன் படைத்தவன்

தேவன் தான் படைத்தவன் -
பெயர் அறியா தாயின் மூலம்

விழிகளை திறந்தவுடன் எனை விட்டு
விடைபெற்றுக் கொண்டாள்

விதியும் விளையாட்டாய் -என்
வாழ்வை விபரிதமாக மாற்றிவிட்டது

சுற்றும் முற்றும் பயங்கரமாய்
ஒளி சூழ இருளில் வாழ்கிறேன்
தனிமையும் நிலையானதால்
தவிப்புக்கள் கொடுமையானதால்

விபரம் தெரியவும் இல்லை
பருவம் அடைந்த போதிலும்

தாயவள் அரவணைப்பும் இல்லை
தந்தையவன் தலையணையாய்
மார்புச் சூடும் இல்லை

கவலைகள் சுகமாய்
கண்ணீர் சுமையாய்

அன்பும் வெறுமையாய்
ஆதரவும் சில கருணையால்
அள்ளித் தருகின்றது அநாதை இல்லம்
அகதியாய் இருக்கும் எனக்கு

சொந்தங்கள் இல்லாமல்
நினைவுகளும் எனக்கு சொந்தமில்லை

நண்பர்கள் இருந்தாலும்
கலகலப்பாய் இருக்க மனமும் இல்லை

தேவன் தானே
படைத்தவன்

என் தேவைகள் எல்லாம்
ஒரு கனவாய் கனவிலாவது
நிறைவேற்றுவார்

நான் கண் மூடி கனவில் சாய்வதற்குள் -அல்ல
கண் மூடி கல்லறையில் மாய்வதற்க்குள்!

எழுதியவர் : கீர்த்தனா (1-Jan-15, 12:35 pm)
பார்வை : 72

மேலே