அம்மா

தன் இறப்பைக் கண்டு
துன்பப்படாமல்
என் பிறப்பைக் கண்டு
இன்பப்படுபவள்...!

தன்னுடல் மெலிவைக் கண்டு
கவலைப்படாமல்
என்னுடல் வளர்வைக் கண்டு
மகிழ்பவள்...!

நான் பேசுவதைக் கேட்டு
பேசுவதறியாமல்
மௌனமாய்
புன்னகிப்பவள்...!

நான் உண்பதற்காக
எங்கள் தெருவில்
கால் வலிக்கும்வரை
வலம் வருபவள்...!

தான் மங்கை
என்பதையே மறந்து
எனக்கு அலங்காரம்
செய்து அழகுபடுத்தியவள்...!

என் உணர்ச்சிகளை
வெளிப்படுத்த
எனக்கென ஒரு மொழியை
அறிமுகப்படுத்தியவள்...!

#பள்ளி நாட்களில் எழுதப்பட்டது

எழுதியவர் : ரமேஷ் ஏகாம்பரம் (11-Jan-15, 8:14 am)
Tanglish : amma
பார்வை : 482

மேலே