இப்படி நாம் காதலிப்போம்-பொங்கல் கவிதைப் போட்டி

முகநூல் வாயிலாக சந்திக்காமல்-இதய
அகநூல் வாயிலாக ஊடல் கொள்ளலாம்...
அன்பே! உன்
வருகைக்காக வருடும் எந்தன்
விழிகளுக்கு புன்னகைப் படையல் படைப்பாயாக...

வண்டுகளின் முத்தத்திற்கு தவமிருக்கும்
பூக்களைப் போன்றதடி!-நம் மனது...

உன் மௌனம் பூத்திருக்கும் வரை
நான் காத்திருப்பேன் -நீ
உதிர்க்கும் ஒற்றைச் சொல்லிதழுக்காக.. .

உன் இருதயக் கூட்டுக்குள் என்னையும்...
என் இருதயக் கூட்டுக்குள் உன்னையும்...
நம் காதலை அடைகாப்போம்-உயிரே!

அவ்வப்போது அழைபேசியில்-
கோபம்
சட்டென உலையாய்க் கொதித்தாலும்
இறுதிவரை நிலையாய் நீதான் வேண்டுமென
இருவரும் இருப்போம்-இனியவளே!


சின்னச் சின்னப் பரிமாற்றத்திலும்-எதிர்காலச்
சிந்தனையை விதைப்போம்...

காதலலை நுரைக்க நுரைக்க உந்தன் கண்ணிலும் எந்தன் கண்ணிலும்
அலைஎழுப்பி -நம்மிரு கண்களையும்
இந்த மண்ணில் வாழ
இன்னொருவருக்கு விதையிட்டுச் செல்வோம்...
............ . . .. ................... ...................

வெ.திருமூர்த்தி
த/பெ.வெள்ளிங்கிரி.
148.பெருமாள் கோவில் வீதி
பெரியார் நகர்.
பொலவக்காளிபாளையம் (அ)
கோபி.(வ)
ஈரோடு(மா) -638476

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (13-Jan-15, 12:30 am)
பார்வை : 93

மேலே