புறப்படு தமிழா புதுயுகம் காண்போம்

தமிழனென்று சொல்லடா !
தலைநிமிர்ந்து நில்லடா !
தலை குனிந்த நெற்கதிரருத்து
தை பொங்கல் வையடா !

வையகத்தில் வாழும் தமிழர்
வாழ்வு செழித்து தலை நிமிர்ந்திட !
சூரிய ஒளி கீற்றைப்போல சூழுரைத்து
எதிர்க்கும் உடல் கிழித்து செல்லடா !

மறவனென்றால் தமிழனென்று
பொருள் விளங்க செய்யணும் !
எட்டுத்திக்கும் பரவிக்கிடக்கும் நம்மினம்
ஏற்றம் பெறவே ஒற்றுமை உணர்வு ஓங்கனும்!

வேற்றுமை தவிர்த்து
ஓரணியாய் சேர்ந்து
ஓங்கி ஒலிக்கட்டும்
தமிழனெனும் குரல் !

ஆமை ஓட்டில் பதுங்கியது போதும்
சீறி பாயும் கழுகாய் வானை நோக்கி பறப்போம்
சீமையெங்கும் தமிழ்ழொலிக்க
கட்டுகடங்கா கூட்டமென்று
கயவர் கூட்டம் கதறியோட....

வட்டமடிப்போம் வா வெளியே !
கரையான் புற்றுக்குள் பாம்பாக
தமிழர் வீட்டை பிறமொழியாள
இனியும் ஆள அனுமதியோன் !!

தமிழன் வீருகொண்டெழுந்தால்
இடுப்பில் வேட்டியும் கட்டுவான்
இடும்பனுக்கு பாடையும் கட்டுவான்
துணிந்திட துணைவி துணைபுரியட்டும் !!

எழுதியவர் : கனகரத்தினம் (14-Jan-15, 1:59 pm)
பார்வை : 120

மேலே