அருக்காணி

தொடங்கப் படுவதற்குள்ளாகவே
என் அத்தியாயங்களை
தொலைத்துவிட்டேன்...,

வீரனாய் இருந்த நான்
விட்டில் பூச்சியாய்
மாறிய விதம்
உன் விழிகள் அறியுமா?....

காற்றுக்கும் கணத்த
இதயமுண்டு...
நிசப்த இரவுகளில்
என் இதயத்தை
உனக்காய் மொழிபெயர்ப்பு
செய்கிறது,,,

ஆடு மேய்க்கும்
அருக்காணியே
மாமனுக்காய்.... ஆறு ஆண்டாய் .... நீ
கொண்ட மாதவம்
இம்மாதமே முடியுமடி..,

என் மீதான
காதலை
அசைபோடும்
ஆட்டோடு அசைபோட்ட
காலம் கழிந்தோடி போனதடி.....

கடனுக்காய் கடல்
கடந்தேன்...,இன்று
கடன் மீண்டேன்.....

உனக்கென கொண்டுவர
உருப்படியாய் ஒன்றுமில்லை
மாமனிடம்......

ஆடு மேய்த்தாலும்
அறுசுவை உணவு
ஊட்டிவிட்டாய்
தைதிரு நாளில்..,

நிச்சயம் நானுனை
காணும் போது...
உச்சித பரிசொன்று
உனக்களிப்பேன்....

அது
உனக்காய் பதியமிடப்பட்ட
என் இதய
தோட்டத்து

....உயிர் பூ......

எழுதியவர் : அ.நா.தாஸ் (14-Jan-15, 7:15 pm)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
Tanglish : arukkaani
பார்வை : 75

மேலே