பொங்கலில் பூத்த காதல்

நீ வைத்த பொங்கலில்
பொங்கியது என் உள்ளம்
நீ கடித்த கரும்பில்
இனித்தது என் இதயம்.

இப்படியே இருந்திடுவோம்
இணைந்து விடு என்னோடு
இனிப்பாய் வாழ்ந்திடுவோம்
வந்து விடு என்னோடு.

தை மகள் வாழ்த்தி விட்டாள்
தாராள மனதுடன்
தரமோடு வாழ்ந்திடலாம்
வந்து விடு கண்ணே நீ...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (15-Jan-15, 11:29 am)
பார்வை : 44

மேலே