பாராட்டாய் மாற்றிடலாமே

சிதையாத சிறகுகளால்
​இறகுகளை விரித்திட்டு
ஓவியமாய் ஒளிர்கிறது
காவியமாய் மிளிர்கிறது
வண்ணமிகு பறவையிது !

கூரிய பார்வையால்
தெரியும் இலக்கினை
வீரிய நெஞ்சமுடனே
விரைந்து அடைந்திட
எத்தனிக்கிறது பறந்திட !

படத்தால் வந்தஅழகா
பறவையால் படம்அழகா
எடுத்தவரின் நுண்ணறிவா
எடுக்கப்பட்ட நுட்பமறிவா
அலசுகிறது நெஞ்சமும் !

ஆய்ந்திட காரணிகளை
தேய்ந்திட வேண்டாமே
பாய்ந்திடும் சிந்தனையை
பாராட்டாய் மாற்றிடலாமே
தேரோட்டாமாய் உள்ளத்தில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Jan-15, 8:46 am)
பார்வை : 110

மேலே