நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும்

உன் இடையழகை வருடிய
நாட்கள் இனி வருமா
காய்ந்து போய் புலம்புகிறேன்...
நதியே ! நான் கரையோர மரத்தில் ஒருவன்...

அன்றாடம் முத்தமிடுவேன்
உன்னூடே கூட்டிச்சென்றாய்
சுடுமணலில் வேகிறேனடி..
நதியே ! பச்சிலை எனக்கு மோச்சமில்லையா...

உன்னோடு நான் பேச
என்னோடு நீ பேச
காதல் பயணம் கொண்டோம்
நதியே ! காற்றாய் இருந்தும் மூச்சு இல்லையடி இப்போது...

பொத்தி பொத்தி பார்த்துக்கொண்டேன்
நதியே உன் பேரழகை
துருப்பிடித்து போனதென்ன
நான் முக்கொம்பூர் அணைக்கட்டு....

தலைக்குளித்து நான் மகிழ்ந்தேன்
இன்றோ உலைக்கொதிக்க துப்பில்லை
கயிற்றுக்கு தலை கொடுத்தேன்
நதியே ! கரைக்கவாவது நீ வருவாயா - விவசாயி...

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் (2-Feb-15, 7:32 pm)
பார்வை : 94

மேலே