நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுற போட்டிக் கவிதை
பச்சிளம் இதழ் திறந்து பிச்சை என விளிக்கும் குழந்தைகளை காண்கையில்
பாசத்திற்காய் ஏங்கும் முதியவர்களை காண்கையில் .
பட்டம்பெற்றும் குப்பை பொறுக்கும் இளைஞர்களை காண்கையில்
பாதியில் பதியை இழந்த விதவைகளை
காண்கையில் .
படைப்பின் பிழையால் பரிதவித்து நிற்கும்
திருநங்கைகளை காண்கையில் .
காதலின் பெயரால்
காமகளியாட்டங்களை காண்கையில் .
கட்சியின் பெயரால்
சாதி மத வெறியாட்டங்களை காண்கையில் .
தேசத்தை விற்று அரசியல் செய்யும்
தலைவர்களை காண்கையில் .
கொட்டத்தை அடக்காமல் குற்றத்திற்கு துணைபோகும்
சட்டத்தை காண்கையில் .
பணத்திற்காய் வனம் அழிக்கும்
கயவர்களை காண்கையில் .
வளம் இழந்ததால் வறண்டு போன
விளைநிலங்களை காண்கையில் .
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இதை
தடுத்திட எவரும் இல்லையே ..!