பெண்ணே நீயும் விழித்திடு

அடியே பெண்ணே எழுந்திடு -நீ
எரிமலை என்பதை உணர்ந்திடு
அரக்கனை அழிக்க புறப்படு -நீ
அநீதியின் தலையை கொய்திடு .

உனக்கு காவல் நீயேதான் -இந்த
உண்மையை உணர்த்தியது உலகின்று
வேலு நாச்சியின் வீரமறி -நீ
ஜான்சி ராணியாய் வாளேந்து .

கானல் நீரைப் பருகாதே -நீ
கயவனை நம்பி போகாதே
காதலாயுதம் எடுத்தே சிலர் -உன்னை
கழுகாய் கொத்தி குதறிடுவார்

கத்தியால் கிழிக்கும் கனவனை -நீ
புத்தியால் விரட்டி புரட்டியடி
கண்ணகி போலே வாழ்ந்திடு -நீ
கயவனை நெருப்பாய் பொசுக்கிவிடு

சுற்றித் திரியும் காமுகனை -நீ
சுத்தியால் தலையில் ஓங்கியடி
மூளைச் சிதறி சாகட்டும் -அதில்
மூடன் பாடம் கற்கட்டும்

பலாத்காரம் என்ற வார்த்தையினை -நாம்
பாரினை விட்டே துரத்திடுவோம்
சின்னஞ் சிறிய சிறுமிகளும் -இனி
சுதந்தர ராகம் பாடடட்டும் ..

நயமாய் பேசும் வஞ்சகனை -நீ
நாகப் பாம்பாய் கொத்திவிடு
நாணயம் போற்ற வாழ்வோம் -நாம்
நாடு சிறக்க உதவிடுவோம் ..

பூமி பந்தது அன்பாலே -பெண்ணே
புதிதாய் பிறக்குது உன்னாலே -இங்கு
உந்துதல் சக்தி நீயேதான் -அதை
உணர்ந்தால் என்றும் இனிமைதான்

ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை
எனப்பாடியவன் கண்டு மகிழட்டும் -நம்மை
பார்த்து பாரும் திருந்தட்டும் -நாம்
செய்யும் சாதனை போதாது -இன்னும்
செய்வோம் சாதனை பலநூறு ..

எழுதியவர் : பிரியாராம் (6-Feb-15, 1:35 pm)
பார்வை : 258

மேலே