அண்டைமொழிகள் அழிந்தது ஏன் கவிஞர் இரா இரவி
அண்டைமொழிகள் அழிந்தது ஏன்?
கவிஞர் இரா. இரவி
*****
கர்னாடகத்தில் இந்தி மொழியை ஏற்றதனால்
கன்னட மொழி அழிந்ததாக அறிவிக்கின்றனர் !
வடமாநிலங்களில் இந்தியை ஏற்றதனால்
அவர்களின் தாய்மொழியை மறந்தனர் !
மும்மொழியை ஏற்றிட்ட மாநிலங்களில்
தம்மொழி அழிந்ததாக புலம்புகின்றனர் !
இருமொழிக் கொள்கையே என்றும் நன்று
தாய்மொழி தமிழும் உலகமொழி ஆங்கிலமும் போதும் !
இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட மொழி
இனிய தமிழ் மொழி இருக்கையில் !
மந்தி மொழியான இந்திமொழி எமக்கு எதற்கு?
இந்தியை அன்றும் இன்றும் என்றும் எதிர்ப்போம் !
மொழிக்காக உயிர் நீத்த வரலாறு தமிழருக்கு உண்டு
மொழியை உயிருக்கு மேலாக மதிப்பவன் தமிழன் !
ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டவரும் இந்தியை என்றும் எதிர்ப்போம் !
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்றும் தொடரும்
இந்தியை கட்டாயமாக்க துடிப்பதை நிறுத்துக!
கல்வி நிதியை வழங்காமல் இருப்பது கொடுமை
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக்கு அநீதி ஏன்?
மாநில சுயாட்சிக்கு மரியாதை தருங்கள்
ஒன்றிய அரசு தமிழக அரசை ஒன்றிட வேண்டும் !
அண்டை மாநிலங்களில் அழிந்ததைக் கூறினோம்
அன்னைத் தமிழை அழிந்திட விடவே மாட்டோம் !
•••••