எதிர்பாரா தருணங்கள்

சண்டையிட்டு கொண்டிருந்த
மரக்கிளைகளுக்கு நடுவே
சந்திரன் எட்டிப்பார்த்தான்

அடுக்குமாடி கருப்பு கண்ணாடியில்
உதயசூரியன் சிதறி
கண்ணை கூசவைத்தான்

திட்டு திட்டாய் சூரிய கிரணங்களால்
மொய்க்கப்பட்ட இலைகள்
தன் பச்சையை பறைசாற்றி கொண்டிருந்தன

பற்றட்ட இலைகள்
முடிவுறா வண்ணமாய்
சாரல் பொழிந்து கொண்டிருந்தன
சாலையெங்கும்

அனைத்தும் நிகழ்ந்தன
எதிர்பாரா தருணங்களில்
நீ உன் காதலை சொன்னதுபோல் !!

எழுதியவர் : ஜெயந்தி (14-Feb-15, 2:43 pm)
பார்வை : 84

மேலே