கண்முன்னே பொக்கிஷம்

தளிர் மேனி துளிர்விடவே -கண்டு
தவித்ததோ அவனது மோகம் இன்று !

அவளது அன்னநடைகண்டு இருகண்கள் விரிய
விரதம் முடிக்க துடித்ததோ மனவண்டு!

வாழைத்தண்டு காலின் பாததடதிற்க்கு மேல்
படிந்திருக்கும் கோவில் மணியொலி கொலுசு !

புள்ளிவைத்து கோலமிட்ட வில் புருவம்
துள்ளி ஓடும் மானின் சாயல் விழி !

மகிழம்பூ வாசம் அவளது திருமேனி
மனதை துளைக்கும் திருகாணி !

செப்புத்தகட்டில் செதுக்கிய மேனியவள்
செப்புமொழியால் செம்மொழியானவள்!

உப்புகாற்றுபடாத செவ்விதழ் கொண்டவள்
கண்டத்தின் கீழிரு செம்மாதுளை சுமப்பவள்!

சுரங்க பொக்கிசத்தை தன்னகத்தே கொண்டவள்
உள்நுழைந்தள்ள முடியா? இருகரம்கொண்டவன் நான் !

எழுதியவர் : நீலமேகம் (21-Feb-15, 3:40 am)
சேர்த்தது : neelamegampv
Tanglish : kanmunne pokkisham
பார்வை : 64

மேலே