கண்முன்னே பொக்கிஷம்
தளிர் மேனி துளிர்விடவே -கண்டு
தவித்ததோ அவனது மோகம் இன்று !
அவளது அன்னநடைகண்டு இருகண்கள் விரிய
விரதம் முடிக்க துடித்ததோ மனவண்டு!
வாழைத்தண்டு காலின் பாததடதிற்க்கு மேல்
படிந்திருக்கும் கோவில் மணியொலி கொலுசு !
புள்ளிவைத்து கோலமிட்ட வில் புருவம்
துள்ளி ஓடும் மானின் சாயல் விழி !
மகிழம்பூ வாசம் அவளது திருமேனி
மனதை துளைக்கும் திருகாணி !
செப்புத்தகட்டில் செதுக்கிய மேனியவள்
செப்புமொழியால் செம்மொழியானவள்!
உப்புகாற்றுபடாத செவ்விதழ் கொண்டவள்
கண்டத்தின் கீழிரு செம்மாதுளை சுமப்பவள்!
சுரங்க பொக்கிசத்தை தன்னகத்தே கொண்டவள்
உள்நுழைந்தள்ள முடியா? இருகரம்கொண்டவன் நான் !