என் உதிரம் எடுத்து

என் உதிரம் எடுத்து உதட்டுச்சாயம் பூச ஆசையா உனக்கு?
இதோ! நான் நெஞ்சைக் காட்டி நிற்கிறேன் எடுத்துக்கொள் என் உதிரத்தை!
நீ இருக்கும் இதயத்தையும் சேர்த்து.
என் நெஞ்சைக் கிழிக்க வரும் உன் கத்தியின் கூர்மைக் கூட உண்மைப் பேசுதடி.
ஆனால் சுகம் தரும் சுவைச்சாறு மிகுந்த உன் உதடுகள் 'காதல் இல்லை' - என்று பொய் பேசுவது ஏனென்று நான் அறியேன்.