கடனுக்குகா கவலை இலவசம்

கடனுக்குக் கவலை இலவசம் !


கடனுக்குக் கவலை
கட்டாயம் இலவசமே
உள்ளதுடன் வாழ்ந்தாலே
உண்டாகும் நிம்மதிமே !

கைமாற்றாய்க் கொஞ்சம்
கைநீட்டி வாங்கினாலே
கைப்பற்றும் பழக்கமது
கடைசிவரைத் தொற்றிடுமே !

வீடுநிலம் அடகுவைத்து
விவசாயம் செய்தாலோ
விளங்காதே குடும்பம்தான்
வேதனையில் மூழ்கிடுமே !

தங்கத்தைப் பணயமாக்கித்
தமையனுக்குச் செலவிட்டால்
வங்கிக்காரன் வட்டிக்காக
வாசலிலே கத்துவானே !

வாகணங்கள் அநுபவிக்க
தவணைக்குப் பெற்றதெலாம்
சோகத்தைக் கொடுத்துவிட்டு
நிறுவனத்தில் நிற்குறதே !

கழித்தலெனும் கணக்கினிலே
கற்றதனால் வந்தவினை
காலமெலாம் தொடருதையா
கடப்பதற்கோர் வழியில்லையா !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (2-Jul-25, 7:00 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 38

மேலே