பஞ்சை பறையன் பாரதி

மகா கவியின் மானுட பிரசங்கம்,

மட்ட மனிதரை தேற்ற பிறந்த பிரசங்கம்...

சுதந்திரத்தில் வாசம் செய்ய,
கற்று தர
உதித்த பிரசங்கம்...

இவன் அருளால் தான் வானம் எட்டி பார்த்தேன்....

மாயையின் புரடி தட்டி பார்த்தேன்...

மேல் வாழ்க்கை வாழ வரம் பெற்றதும் இவனால் தான்...

நிஜத்தின் சாயலாம் பாரதி, நிரந்தரம் சொல்லி தந்தான்...

முடங்கி கிடந்த மானை துள்ளி எழும்ப செய்தான்....

மோகத்தின் முகமூடி கிழித்து,
அதன் நெஞ்சை மூர்கமாய் முட்ட
வித்திட்ட மேதாவி,

என்றும் என்னுல் அக்கினி குஞ்சாய்....

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Mar-15, 6:24 pm)
பார்வை : 373

மேலே