எங்கேயோ

எங்கேயோ....?

உன் -
இதழ் அவிழ்ந்த
இள நகையாள்...!
என் -
இதயமானாய்...!

உன் -
மணங் கமழும்
மதுரத்தினால்...!
என் -
மார்க்கமானாய்...!

உன் -
அசைதாடும்
அழகதனால்....!
என் -
ஆலய மானாய்.....!

உன் -
உதிரத்தின்
உயிர் ஏற்றி....
என்னில் -
உதித்திட்ட ரோஜாவே....!

இந்த -
தவத் தளிரை
வெட்டி கொண்டு...
நீ -
தவழ்ப் போவது
எங்கேயோ....?

எழுதியவர் : இராக. உதய சூரியன். (25-Mar-15, 2:29 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 81

மேலே