அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் தளபதி ஸ்டாலின் அவர்களே
அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்........ தளபதி ஸ்டாலின் அவர்களே...!
இந்த தீர்ப்பின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்,
கண்ணியமான மாற்று கருத்துக்களை தங்கள் அரசியல் செயல்பாடுகள் மீது தெரிவிக்கப்படும் விமர்சனங்களாக அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமையும்.
ஆனாலும், சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஏனென்றால், நம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள பெரும் வாய்ப்பு வழங்கும் சமூக வலைத்தளங்களில் நாம் சொல்லும் கருத்து எவ்வளவு தாக்கத்தை சமுதாயத்தில் உருவாக்கும் என்று உணருவதும் நம் கடமை என்பதில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பாயிண்ட் நம்பர் ஒன் - கவனமுடன் பயன்படுத்தவும்....
பாயிண்ட் நம்பர் டூ - கருத்து தாக்கத்தை சமுதாயத்தில் உருவாக்கும் என்று உணர்வதும் நம் கடமை....
இப்போ..... நம்ம தலைப்புக்கு வாருங்கள்...நண்பர்களே / தோழர்களே..!
- சங்கிலிக்கருப்பு -